சென்னை, ஜூலை 21 –
ஸ்ரீராம் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் தனது மூன்று ஹைப்ரிட் நிதிகளுக்காக ஒரு புதுப்பிக்கப்பட்ட நிதி வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்புகள் பரஸ்பர நிதி விநியோகஸ்தர்கள் பங்குதாரர்கள் ஆகியோருக்கு சலுகை காலம் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைமுறையில் இருக்கும்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீராம் ஏஎம்சி நிறுவனத்தின நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான கார்த்திக் ஜெயின், இந்தப் புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்பு, ஸ்ரீராம் மல்டி அசெட் அலோகேஷன் ஃபண்ட், ஸ்ரீராம் அக்ரசிவ் ஹைப்ரிட் ஃபண்ட் மற்றும் ஸ்ரீராம் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த நிதிகள், பங்கு, கடன் மற்றும் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகளை இணைக்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட சொத்து ஒதுக்கீட்டு அணுகுமுறையைப் பின்பற்றும். இது சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப நிதி மேலாளர்கள் தங்கள் ஒதுக்கீடுகளை மாறும் தன்மையுடன் சரிசெய்ய அனுமதிக்கிறது.
நிறுவனத்தின்படி, இந்தத் திருத்தப்பட்ட முதலீட்டுக் கட்டமைப்பில், சொத்து ஒதுக்கீட்டு செயல்முறை, நியாயமான விலையில் வளர்ச்சி கொள்கைகளின் அடிப்படையிலான பங்குத் தேர்வு முறை, ஆராய்ச்சி அடிப்படையிலான நிலையான வருமான கட்டமைப்பு மற்றும் தங்கம், வெள்ளி மீதான முதலீடு ஆகியவை அடங்கும்.
ஸ்ரீராம் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட், ஈக்விட்டி மற்றும் கடன் பத்திரங்களுக்கு இடையே மாறும் தன்மையுடைய ஒதுக்கீட்டை விரும்பும் முதலீட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஸ்ரீராம் அக்ரசிவ் ஹைப்ரிட் ஃபண்ட், நீண்ட கால மூலதன மதிப்பு உயர்வதற்கான சாத்தியக்கூறுடன், அதிக ஈக்விட்டி பங்களிப்பை வழங்குவதே இந்த மறுசீரமைப்பின் நோக்கம் என்று தெரிவித்தார்.


