தஞ்சாவூர், ஜூலை 16 –
தஞ்சாவூரில் உலக மக்கள்தொகை நாளையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை தஞ்சாவூர் ரெயிலடியில் மாவட்ட கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்து தெரிவித்ததாவது: மாவட்டத்தில் ஜூலை 11 முதல் 31 ஆம் தேதி வரை அனைத்து அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதா ர நிலையங்களில் தகுதி உள்ள தம்பதிக்கு நிரந்தர கருத்தடை செய்யப்படுகிறது.
இதில் ஆண் கருத்தடை சிகிச்சை, பெண்களுக்கு குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை, தற்காலிக கருத்தடை முறைகளான கருத்தடை வளையம் பொருத்துதல், அந்தாரா கருத்தடை ஊசி போடுதல், சாயா மற்றும் கருத்தடை மாத்திரை வழங்குதல் ஆகிய பணிகள் சிறப்பான முறை யில் தமிழக அரசின் நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் தகுதிவாய்ந்த தாய்மார்களுக்கு கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி ஆசிரியர்கள், பணியாளர்கள் மூலமாகவும் தொலைபேசி, காணொளி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார் கலெக்டர். இப்பேரணி காந்திஜி சாலை வழியாக அரசு இராசாராசுத்தார் மருத்துவமனை வரை சென்றடைந்தது.
நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர் விஜய் சரவணன் மேயர் (பொறுப்பு) டாக்டர் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மணிமேகலா, இணை இயக்குனர் (நலப் பணிகள்) முருகப்பன், துணை இயக்குனர் (மருத்துவம்) அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



