ஈரோடு, பிப். 6 –
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் சிறிய அளவிலான பால் பண்ணை திட்டத்தின் கீழ் 45 விவசாய பயனாளிகளுக்கு 90 கறவை மாடுகள் கொள்முதல் செய்திட ரூ.67.5 லட்சம் மதிப்பீட்டிலான வங்கி கடனுதவியினை வழங்கினார்.
ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் ஒன்றியத்திற்கு சிறு பால் பண்ணைகள் அமைக்க 250 குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி மாவட்டத்தில் தகுதியுள்ள 365 நபர்களுக்கு தலா 3.00 லட்சம் வீதம் வங்கி கடன் வழங்க பரிந்துரை செய்யப்பட்டு, தற்போது 45 விவசாய பயனாளிகளுக்கு 90 கறவை மாடுகள் கொள்முதல் செய்திட முதற்கட்டமாக 67.5 லட்சம் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தகுதியுள்ள நபர்களுக்கு படிப் படியாக கடன் வழங்கி கறவை மாடுகள் கொள்முதல் செய்து வழங்கப்படவுள்ளது
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமேலாளர் அமிர்தலிங்கம், துணைப்பதிவாளர் (பால்வளம்) சையத் ஏஜாஸ், உதவி பொது மேலாளர் (பால் கொள்முதல்) டாக்டர்.மு.பரமசிவம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



