கிருஷ்ணகிரி, ஜூலை 16 –
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் மத்திய ஒன்றியம் பெருகோப்பனப்பள்ளி ஊராட்சியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பெருகோப்பனப்பள்ளி கிராமத்தில் காமராசர் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் முரளிதரன் தலைமை தாங்கி தவெக கட்சி அலுவலகம் வளாகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள், பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்கள், மகளிருக்கு புடவைகள் ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பர்கூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பசவராஜ், பர்கூர் மத்திய ஒன்றிய செயலாளர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெருகோப்பனப்பள்ளி ஊராட்சி சேர்ந்த மத்திய ஒன்றிய இளைஞரணி நிர்வாகி மனோஜ் குமார், ஒன்றிய துணைச் செயலாளர் அஜித்குமார், கிளைச் செயலாளர் சுரேஷ், கிளை இணைச் செயலாளர் சதீஷ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சத்யராஜ், தகவல் தொழில்நுட்ப அணி சேலம் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் ஜெயசூர்யா, பர்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ், பர்கூர் நகர செயலாளர் பிரித்திவிராஜ், அசோகன் மற்றும் மத்திய ஒன்றிய இணைச் செயலாளர் ஹேமானந்தன், மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் பத்மா, கோவிந்தசாமி, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



