ஒசூர், ஜூலை 14 –
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பிரபலமான ஹஸ்ரத் யாரப் தர்காவில் யானை மேல் சந்தனக்குட ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு கட்சி நிர்வாகிகள், பிரபல தொழிலதிபர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலர் இந்த விழாவில்
கலந்துக் கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர். மற்றும் இந்த விழாவில் மூன்று நாட்களும் தொடர்ந்து அன்னதானம் நடைபெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேல் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவிற்கு வருகைப் புரிந்த அனைவரையும் தேன்கனிக்கோட்டை எஸ்.ஏ.டி.முஜாமில் பாஷா ஹஸ்ரத் யாரப் தர்கா முத்தவல்லி (தலைவர்) மற்றும் செயலாளர் A.மஹபூப்கான் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் S.A.T.முதாசீர் பாஷா, R.தில்லு ஷெரீப், H.B.கலிம் பேக், சையத் அப்சல்,முஹம்மத் ஜாபர் ஷெரிப், M.சையத்பாசில், முஹம்மத்து குத்பத்தீன், ஷேக், முஹமத் சுல்தான் வருகைப் புரிந்து சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி பூ மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் தலைமையில், தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் சாவித்திரி முன்னிலையில், தேன்கனிக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் மேற்பார்வையில் காவல்துறையினர் சிறப்பாக பாதுகாப்பு வழங்கப்பட்டது, தர்கா கமிட்டி நிர்வாகிகள் பொதுமக்கள் பாதுகாப்பு வழங்கப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு நன்றி கூறினார்.



