தருமபுரி, ஜூலை 04 –
தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் திடீரென நுழைந்து உள்புறமாக கேட்டை பூட்டிக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது.
அப்போது பல்வேறு ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ. 50,000 சிக்கியது. இது தொடர்பாக அந்த அலுவலகத்தில் இருந்த பணியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதனால் தருமபுரியில் பரபரப்பு ஏற்பட்டது.



