கோவை, ஜூலை 1 –
பொள்ளாச்சியில் புதிதாக அறத்தமிழன் அறக்கட்டளை துவக்க விழா பொள்ளாச்சி லாரி உரிமையாளர்கள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. துவக்க விழாவிற்கு அறக்கட்டளையின் தலைவர் மண்ணூர் ராமர் தலைமை வகித்தார். அறக்கட்டளையின் செயலாளர் பொறியாளர் ரவிச்சந்திரன் வரவேற்புரை வழங்கினார்.
தொடர்ந்து ‘இமுட்’ மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் பிரதீப், சரஸ்வதி தியாகராஜா கல்லூரியின் முதல்வர் முனைவர் வனிதாமணி, லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் கொண்டனர்.
பட்டாம்பூச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர் முருகானந்தம், முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் அபு இக்பால், வளர்பிறை சமூக நல அறக்கட்டளை தலைவர் ஜெரினா பானு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பொறியாளர் கவின் குமார், கோகுல், கண்ணன், சிவானந்தகுமார், காளிமுத்து, பொறியாளர் கதிர்வேல், மன்னூர் சரவணகுமார், பொறியாளர் செல்வகுமார், லேப் டெக்னீசியன் மாதேஷ், போட்டோ கிரியேஷன்ஸ் அஜித், நவநீதம், மலர்கொடி, நந்தினி, அமுதா, வெள்ளியங்கிரி, கீதா, பார்த்திபன், மேகலா, ஜெயசீலன், ஆறுமுகம் போன்ற அறக்கட்டளை உறுப்பினர்கள் இணைந்து பங்கேற்றனர்.



