நாகர்கோவில், ஜூன் 29 –
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் அறிமுக விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி குத்துவிளக்கு ஏற்றி வைத்து பின்னர் எழுச்சி உரையாற்றினார். மாவட்டத் தலைவர் குமரன் நாகேந்திரன் மற்றும் மாவட்டச் செயலாளர் கோபுராஜ் தலைமை வகித்தனர். பின்னர் புதிய நிர்வாகிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் சரவண சுப்பையா ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் மாநிலத் தலைவர் கொளத்தூர் ரவி செய்தியாளர்களிடம் கூறும் போது: புதிதாக அமைந்துள்ள தமிழக அரசுக்கு நமது சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் மறைந்த வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும். இதுபோன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் கிழக்கு மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட பொருளாளர் சுபாஷ், மத்திய மாவட்ட இளைஞரணி தலைவர் திலீப் குமார், தூத்துக்குடி புறநகர் தலைவர் ஜான் ராஜா, நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் லிங்க சித்திரை மற்றும் நிர்வாகிகள், மகளிர் அணி தலைவி பத்மாவதி, மகளிர் அணி செயலாளர் பெமிஅருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



