மார்த்தாண்டம், ஜூன் 18 –
குமரி மாவட்டத்தில் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டி பாலம் உட்பட சுற்றுலா தலங்களில் தமிழக சுற்றுலா துறை பொது மேலாளர் லெஷ்மி பிரியா தலைமையில் அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அருவியில் சுற்றுலா துறை சார்பில் நடைபெற்று வரும் கழிவறை மற்றும் ஆண் பெண்கள் உடை மாற்றும் அறைகளில் கதவுகள் தரம் அற்ற முறையில் அமைக்கப்பட்டு உள்ளதால் அந்த கதவுகளை மாற்றி அமைக்கவும், சுற்றுலா பயணிகள் பொருட்கள் பாதுகாப்பு அறை உடை மாற்றும் அறை அருகே செயல்படும் வகையில் அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பொது பணி துறை அதிகாரிகள் உதவியோடு அரசு புறம் போக்கு நிலங்களை அடையாளம் கண்டு அளவீடு செய்து சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்த முறையான நடவடிக்கை எடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பேருராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.



