தஞ்சாவூர், ஜூன் 17 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவ லக கூட்டரங்கில் முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தேரர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரி க்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். மொத்தம் 30 மனுக்கள் பெறப்பட்டன.
மேலும் முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில் 17 நபர்களுக்கு ரூபாய் 3, 51,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. இக்கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர் கள் என 90 நபர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல துணை இயக்குநர் லெப். கர்னல்.
க.ஞானசேகர் (ஓய்வு), நல அமைப்பாளர் அ.ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



