ஈரோடு, ஜூன் 11 –
ஈரோட்டை அடுத்த பள்ளி பாளையத்தில் ஆரா பிசியோதெரபி மற்றும் மறுவாழ்வு மையம் மற்றும் யுனைடெட் கேர் ஆக்குபேஷனல் தெரபி -பேச்சு சிகிச்சை மையம் திறப்பு விழா
சண்முகா மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஆரா பிசியோதெரபி – மறுவாழ்வு மையம் மற்றும் யுனைடெட் கேர் ஆக்குபேஷனல் தெரபி & பேச்சு சிகிச்சை மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது இதை சண்முகா மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் அன்னக்கொடி திறந்து வைத்தார்.
ஸ்ரீவெங்கடேஸ்வரா பிசியோதெரபி கல்லூரி முதல்வர் டாக்டர் நந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். யுனைடெட் கேர் ஆக்குபேஷனல் தெரபி பேச்சு சிகிச்சை மையம் நிறுவனர் டாக்டர் கார்த்திகேயன் வரவேற்றார். இந்த மையத்தில் பக்கவாதம், முதுகுத்தண்டு காயம், மூளை காயம், செரிப்ரல் பால்சி, பார்கின்சன் நோய் உள்ளிட்ட நரம்பியல் மற்றும் எலும்பியல் பிரச்சினைகளுக்கான பிசியோதெரபி சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும், குழந்தைகளின் வளர்ச்சி தாமதம், பேச்சுக் குறைபாடுகள், ஆட்டிசம், கற்றல் சிரமங்கள் மற்றும் விழுங்குதல் குறைபாடுகளுக்கான ஆக்குபேஷனல் தெரபி மற்றும் பேச்சு சிகிச்சை சேவைகளும் ஒருங்கிணைந்த முறையில் வழங்கப்படுகின்றன.



