தென்தாமரைகுளம், ஜூன் 5 –
உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் கரும்பாட்டூர் ஊராட்சி அலுவலகம் அருகில் தனி அலுவலர் பத்மா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 படி வீடுகள், கடைகள் மூலம் வழங்கப்படும் குப்பைகளை நான்கு வகையாக பிரித்து தூய்மை காவலர்களிடம் வழங்குவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வசந்தா உதவி திட்ட அலுவலர் (வீடுகள்), மங்கம்மாள் ஊர்நல அலுவலர், ஊராட்சி செயலர் காளியப்பன், சுகாதார ஊக்குனர் அமிர்தேஷ்வரி, தூய்மை பணியாளர்கள் பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



