திருச்சி, ஜூன் 2 –
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக வீர் பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அரசு உத்தரவின்படி, நேற்று (01. 06. 2026) அவர் பொறுப்பேற்றார். புதிய ஆணையர், திருச்சி மாநகர மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், குறைகளைத் தீர்ப்பதிலும் முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.



