கோவை, ஜூன் 02 –
கோவை மாநகர் மாவட்டம் இதய தெய்வம் மாளிகையில் கழகம் ஒன்றிணைய வேண்டி தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் மகேந்திரன் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். அவருக்கு கோவை மாவட்ட கழகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.ஜெயராம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கழக மாணவரணி செயலாளர் சிங்கை ஜி.இராமச்சந்திரன் மாவட்ட நிர்வாகிகள் துரைசாமி, பார்த்திபன், லீலாவதி உன்னி, கழக இலக்கிய அணி செயலாளர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் சிங்கை பாலன், மாநில சார்பு அணி செயலாளர் எஸ்.ஆர்.ரவி.அசோக்குமார், தமிழ் முருகன், பப்பாயா ராஜேஷ், சக்திவேல், பகுதி கழக செயலாளர் சுப. மணிகண்டன் மௌனசாமி நடராஜ் காட்டூர் செல்வராஜ் செல்வகுமார், ராஜ்குமார், சந்திரசேகர், சிவக்குமார், உலகநாதன், வெள்ளியங்கிரி வடவள்ளி கிருஷ்ணசாமி, ராயப்பன் மற்றும் கழகச் செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.



