தேனி, மே 26 –
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 29.05.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
தேனி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்கள் குறித்த கோரிக்கைகளை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மனுக்களாக வழங்கலாம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுக்கள், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி அதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.



