சுசீந்திரம், மே 25 –
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் நேற்று உலக அமைதி வேண்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை நடைபெற்றது. பின்பு சீவிலிபிரகார அரங்கம் முன்பு ஸ்ரீசக்கர சகஸ்திர நாம வேள்வி பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பெருமளவு கலந்து கொண்டனர். சென்ற ஆண்டு இதேபோல உலக அமைதிக்கு வேண்டி ஸ்ரீ சக்கர அகஸ்திய நாம வேள்வி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டார்.


