By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் ரேஷன் அரிசி கடத்தல் விவகாரம்: அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்

Last updated: May 25, 2026 5:02 pm
May 25, 2026
44 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 25 –

நாகர்கோவிலை அடுத்த கோவில் விளையில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் பதுக்கப்பட்டு இருந்த சுமார் 5 டன் ரேஷன் அரிசி, கோதுமை மூடைகளை குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த வாரம் கைப்பற்றினார். இவை அனைத்தும் நுகர் பொருள் வாணிப கழக குடோன்களில் இருந்து ரேஷன் கடைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மூடைகள் ஆகும்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சகாதேவன் (52), சரலூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (45), மூவேந்தர் நகரை சேர்ந்த மோகன் (54) ஆகிய 3 பேரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடந்த விசாரணையில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் நுகர்வோர் வாணிப கழக குடோனில் பணியாற்றிய இரண்டு முக்கிய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

விசாரணை நடத்திய போலீசார் நேற்று முன்தினம் ஜூனியர் குவாலிட்டி ஆய்வாளர் ரமேஷ், ஜூனியர் அசிஸ்டன்ட் (பாயின்ட் கிளார்க்) செந்தில் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதே போல் நேற்று நுகர்வோர் வாணிப கழக குடோன் காவலாளிகளில் ஒருவரான பாபு என்பவரையும் கைது செய்தனர்.

இதுவரை இந்த சம்பவத்தில் 3 வியாபாரிகள், நுகர்வோர் கழக குடோனின் பணியற்றும் 2 அதிகாரிகள், ஒரு காவலர் என ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது கைதாகி உள்ள அதிகாரிகள் ரமேஷ், செந்தில்குமார் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நுகர்வோர் வாணிப கழக மேலாளர் பரிந்துரையின் பெயரில் இயக்குனர் பிறப்பித்துள்ளார். போலீஸ் விசாரணையில் கைப்பற்றப்பட்ட அரிசி, கோதுமை மூடைகள் நாகர்கோவில் அருகே உள்ள பெரிய காடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டியவை என தெரிய வந்தது.

இந்த கடையின் பெயரில் கூடுதலாக அரிசி மூடைகள் கோதுமை மூடைகளை ஒதுக்கீடு செய்து பின்னர் அவற்றை தென்னந் தோப்பில் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே பைக் மோதியதில் மூதாட்டி பலி; வாலிபர் படுகாயம்
காரை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட இருவர் கைது
பக்தர்களுக்கு அதிமுக சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
தஞ்சாவூரில் ரூ.3 கோடியில் முதலமைச்சர் படிப்பகம் கட்டுமான பணி: கலெக்டர் ரேவதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்
கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி சிபிஎஸ்இ பள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மகா உற்சக விழா

December 23, 2024
66 Views
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
வீரமங்கை வேலுநாச்சியாரின் 295-வது பிறந்த நாள் விழா
களியல் அருகே சிற்றாறு 2 அணை பகுதியில் ரிசார்ட்
போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account