சுசீந்திரம், மே 25 –
சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை தெற்கு தெருவை சார்ந்தவர் குமாரசாமி (72). இவர் பறக்கை பகுதியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது மனைவி ஆச்சியம்மாள் (71). தனது கணவருக்கு சாப்பாடு கொடுத்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயலும் பொழுது நாகர்கோவிலில் இருந்து தெங்கம்புதூருக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர் மூதாட்டியை இடித்து தள்ளியதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டியின் வலது கால் முறிந்தது.
படுகாயம் அடைந்து ரோட்டில் கிடந்த போதும் கண்டு கொள்ளாமல் இரு சக்கரத்தில் வந்த நபர் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை ஆசிரமம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேர்த்தனர். மூதாட்டி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து ஆச்சியம்மாளின் கணவர் குமாரசாமி சுசிந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசிந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை இடித்து விட்டு தப்பி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


