திருச்சி, மே 23 –
புதுக்கோட்டை மாவட்டம் மணக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த செவிலியர் மாணவி சீதாலட்சுமி (19) திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூக்கில் சதை வளர்ச்சி காரணமாக நேற்று (மே 22) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது, அதிக மயக்க மருந்து கொடுத்ததால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து தவறான சிகிச்சையால் சீதாலட்சுமி உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டி உறவினர்களும், சக மாணவர்களும் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாணவியின் மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் மாணவிகளிடம் உறுதி அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



