தருமபுரி, மே 23 –
தருமபுரி ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் ஒகேனக்கல் செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பொதுமக்கள் நலனை கருதி பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம் வழியாக ஒகேனக்கல் செல்கிறது. இதேபோல் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளும் மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. புறநகர பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவதையொட்டி பேருந்து நிலைய வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.



