திருச்சி, மே 19 –
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொன்மலை பகுதி செயலாளராக 9 ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் கவுன்சிலர் ஆர்.சங்கர், அக்கட்சியில் இருந்து விலகியதை அடுத்து தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து தன்னை இணைத்துக் கொண்டார். மேலும், திருச்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.



