நாகர்கோவில், மே 18 –
நாகர்கோவில் நடந்த இந்திய கிளினிக் மருத்துவர்கள் சங்கத்தின் முப்பெரும் விழாவில்
கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில்
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அதை நீங்கள் ஆவணப்படுத்த வேண்டும் என
அரசு ஆயுர்வேதா கல்லூரி முதல்வர் அறிவுரை வழங்கினார்.
இந்திய கிளினிக் மருத்துவர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா நாகர்கோவில் வெட்டூர்ணிமடம்
தனியார் அரங்கில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில தலைவர் மருத்துவர் பெனிஸ் ராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் விஜய் பிஸ்மர் முன்னிலை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் மருத்துவர் ஆல்பர்ட் ரோமண்டோ வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய பொதுச் செயலாளர் சுல்தான் அகமது, கோட்டார் அரசு ஆயுர்வேதா கல்லூரியின் முதல்வர் மருத்துவர் கிளாரென்ஸ் டேவி மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி ராபர்ட் சிங் கலந்து கொண்டு முப்பெரும் விழாவின் நோக்கம் குறித்து பேசினர்.
ஓய்வு பெற்ற அரசு சித்த மருத்துவர் தியாகராஜன், மதுரை சித்த வைத்திய சங்கத்தின் தலைவர் மருத்துவர் சோலைமலை வரதராஜன், அக்குபஞ்சர் சிச்சியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரபி வார்ம ரமேஷ் பிரபு, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அந்தோணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் சுனில் பாபு, அப்துல் ரகுமான், ஷாஜகான், பால் மணி, நாகராஜன் ராமசாமி, நல்ல முகமது ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறந்த மருத்துவர்களுக்கான கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாநில மக்கள் தொடர்பாளர் ஜெரோம் பிரதாப் சிங் செய்திருந்தார். பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இறுதியில் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் வேல்மணி ராஜன் நன்றி உரையாற்றினார்.



