நாகர்கோவில், மே 15 –
நாகர்கோவில் அடுத்த ஈர்தாமொழி, பொழிக்கறையை சேர்ந்தவர் ஆன்றோ (51). மீனவர். இவருக்கு சகாய ரூபெல்லா (45) என்ற மனைவி, பிள்ளைகள் உள்ளனர். ஆன்டோவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதால் அவர் அடிக்கடி வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ தினம் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆன்றோ தனது பைக்கை எடுத்து கொண்டு வெளியில் சென்று விட்டார். இதனால் சகாய ரூபெல்லா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று சென்றுள்ளார்.
இதை அடுத்து இன்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் சகாய ரூபெல்லாவுக்கு தகவல் கூறினார். இதையடுத்து வீட்டிற்கு சென்ற அவர் உட்புறமாக பூட்டப் பட்டிருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆன்றோ காணப்பட்டார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
இது குறித்து ஈத்தாமொழி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திலே சென்று உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


