தக்கலை, மே 14 –
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கீழக்கல்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (51). குமரி மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளராக உள்ளார். வெளிநாட்டில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வந்த ரவிக்குமார் கடந்த 2021 ஆம் ஆண்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்து விட்டார். அதன் பிறகு இங்கு பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மேலும் திமுக நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்தார்.
இந்த நிலையில் டெல்லி மல்டி பர்ப்பஸ் சொசைட்டி பைனான்ஸ் ஐ தக்கலையில் தொடங்க திட்டமிட்டார். அப்போது அவருக்கு குலசேகரம் அருகே உள்ள வெண்டலிகோடு பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் (45) என்பவர் அறிமுகமாகி இருக்கிறார். ரவிக்குமார் தன்னை வக்கீல் என்று அறிமுகம் செய்து கொண்டு, தனக்கு டெல்லியில் சிலரை தெரிந்த நபர்கள் உண்டு எனவும், அவர் தொடங்க திட்டமிட்டு இருக்கும் பைனான்சுக்கு அனுமதி பெற்றுத்தர உதவுவதாகவும் கூறியிருந்தார்.
மேலும் இரண்டு லட்சம் பணமும் கேட்டிருக்கிறார். இதை எடுத்து ஜெகதீசுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவிக்குமார் 1.75 லட்சம் கொடுத்திருக்கிறார். ஆனால் அவர் கூறியபடி அனுமதி பெற்று தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. ஆகவே தன்னிடம் பணம் வாங்கி மோசடி செய்து விட்டதாக தக்கலை போலீஸ் நிலையத்தில் ரவிக்குமார் கடந்த பிப்ரவரி மாதம் புகார் செய்தார்.
அதன் பெயரில் தக்கலை போலீசார் வழக்கப்பதிந்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த ஜெகதீஷை தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் ஜெகதீஷ் தக்கலை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
அவரிடம் மோசடி புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. ஜெகதீஸ் தற்போது தவெக பிரமுகராக இருக்கிறார். பண மோசடி வழக்கில் தவெக பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தக்கலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



