கன்னியாகுமரி, மே 9 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வருடம் மட்டும் சுமார் 2 கோடி மதிப்புள்ள 1265 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
🌟 இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
🌟 உத்தரவின்படி சைபர் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். தொடர் நடவடிக்கையால் தற்போது சுமார் 48,00,000 (நாற்பத்தி எட்டு இலட்சம் ரூபாய்) மதிப்புள்ள 320 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நபர்களிடம் இன்று ஒப்படைத்தார்.
🌟 இந்த செல்போன்களை கண்டுபிடிக்க காரணமான சைபர் பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார். மேலும் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
🔹 குறிப்பு: பொதுமக்கள் தங்களுடைய செல்போன் தொலைந்து போனால் அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக மனு அளிக்கவேண்டும் அல்லது Tamilnadu Police Citizen Portal (https://eservices.tnpolice.gov.in) என்ற காவல் துறை இணையதளத்திலும் தங்களது புகாரை பதிவு செய்யலாம். CEIR Portal ( https://www.ceir.gov.in/) என்ற இணையதளத்தில் தொலைந்த செல்போனை Block செய்ய முடியும்.



