தஞ்சாவூர், மே 7 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,958 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3,248 கட்டுப்பாட்டு கருவிகளும், 3,562 வாக்களித்ததை பார்ப்பதற்கான இயந்திரங்களும் உள்ளன. இவை கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்ட பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட்டன. இதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டன.
தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து, இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவிகள் வாக்களித்ததை பார்ப்பதற்கான இயந்திரங்கள் ஆகியவை மீண்டும் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் (மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கில்) வைக்கப்பட்டன.
மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் முன்னிலையில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டன.



