குளச்சல், மே 7 –
குளச்சல் அருகே பூலவிளை என்ற பகுதியை சேர்ந்தவர் பங்கிராஜு மகன்கள் மணிகண்டன் (39), விஜயகுமார் (38). இதில் விஜயகுமார் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். அவர் திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மணிகண்டனுக்கு திருமணமாகவில்லை. கட்டிட வேலைக்கு சென்று வந்தார். தாயார் ராஜாத்துடன் வசித்து வந்தார்.
மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக மணிகண்டன் திருமணமாகாத கவலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை வீட்டுக்கு வந்த மணிகண்டன் சிறிது நேரம் கழித்து வெளியே சென்றார். பின்னர் இரவு வீட்டிற்கு வரவில்லை.
இதற்கு இடையே இன்று காலை தாயார் ராஜம் வீட்டுக்கு பின்பக்கம் சென்று பார்க்கும் போது மணிகண்டன் மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்த நிலையில் காணப்பட்டார்.
இது குறித்து உடனடியாக குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


