நாகர்கோவில், மே 05 –
தமிழக அரசியலில் பெரும் சரித்திர மாற்ற நிகழ்வு நடந்தேறியுள்ளது. புரட்சி மாற்றமாக விஜய் தமிழகத்தில் புதிய அவதாரம் எடுத்தாலும் கூட, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியை கூட தவெக கைப்பற்றவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், ஐந்து தொகுதிகளில் திமுக கூட்டணியும், ஒரு தொகுதியில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. இங்குள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் என்றும், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி மட்டும் திமுகவுக்கு இழுபறியாக இருக்கும் என்றும், முன்பே அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் கூறியிருந்தார். அச்செய்தி தினதமிழ் நாளிதழில் வெளியாகியிருந்தது. அது போலவே தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன.
இது குறித்து அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் கூறுகையில்,” தேர்தல் முடிவுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக கூட்டணிக்கு சாதமாகவே அமையும் என்பது முன்பே எதிர்பார்த்தது தான். அது போன்றே நாகர்கோவில், பத்மனாபபுரம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. கன்னியாகுமரி தொகுதியை பொறுத்தமட்டில் திமுகவுக்கு இழுபறியாக இருக்கும் என்று தான் கூறியிருந்தேன். அதுபோலவே கன்னியாகுமரி தொகுதியில் நூலிழையில் தான் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.” இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.
நாகர்கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஆஸ்டினுக்கு அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் ஆதரவு அளித்து செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.



