நாகர்கோவில், ஏப்ரல் 30 –
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் மீண்டும் திமுக, தனிப்பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் அமைந்துள்ளது. பவர்புல்லான திமுக ஆட்சியின் செயலாக்கம், மகளீர் திட்டங்கள், தலைமை மீதான நம்பிக்கை, கூட்டணி கட்சிகளின் பலம் போன்றவை திமுக வெற்றிக்கு வாய்ப்பாக அமையும். அதுவும் தனிப்பெரும் பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமையும், புதிய பிரபலங்கள் இல்லாததும், ஒன்றிய தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லாமலும், தற்போது மீண்டும் பாஜகவுடன் கை கோர்த்துள்ளதும், சசிகலாவின் எதிர்ப்பலையும் ஒரு மைனஸ் பாயிண்ட்டாகவே அமைகிறது. அது போன்று ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செய்த நல திட்டங்களை தான் மக்களிடம் முன் வைத்து வாக்குகளை சேகரிக்க வேண்டியிருந்தது. இதனால் அவர்கள் எதிர்பார்த்த தொகுதிகளை பெறுவார்களா என்பது சந்தேகம்தான்.
அதே நேரம் புதிய வரவான தவெகவால் அதிமுக வாக்குகள் சிதறுகிறதே தவிர திமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் இந்த தேர்தலில் விஜய் கணிசமான வாக்குகளை வாங்குவார். ஆனால் வெற்றி வாய்ப்பு என்பது அரிது தான். இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.



