By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டாக்கத்தி தாக்குதல்: வாலிபரிடம் துணிச்சலுடன் செயல்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பட்டாக்கத்தி தாக்குதல்: வாலிபரிடம் துணிச்சலுடன் செயல்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

பட்டாக்கத்தி தாக்குதல்: வாலிபரிடம் துணிச்சலுடன் செயல்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

Last updated: April 29, 2026 6:13 pm
April 29, 2026
11 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப். 29 –

தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே கீழராஜவீதியில், எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் 2 வாலிபர்கள் மது போதையில் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென தாக்கிக் கொள்ள முயன்றனர். போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி என்பதால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

அப்போது அங்கிருந்த மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சம்மந்தம் தனது பணி முடிந்து வந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் சாலையில் இரு வாலிபர்களும் பட்டாக்கத்தியுடன் மோதிக் கொண்டதை பார்த்து சற்று யோசிக்காமலும், தனது ஓய்வு நேரத்திலும் கூட மிகுந்த தைரியம் மற்றும் விழிப்புணர்வுடன் துரிதமாக செயல்பட்டு பட்டாக்கத்தி வைத்திருந்த வாலிபரை தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் செயல்பட்டு போதையில் இருந்த அந்த வாலிபரிடம் இருந்து பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தார்.

தகவலறிந்து விரைந்த வந்த கிழக்கு போலீசார் பட்டாக்கத்தி வைத்திருந்த வாலிபரை பிடித்து விசாரணைக்காக தஞ்சாவூர் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். போலீசார் விசாரணையில், இரு வாலிபர்களும் ஒரே பெண்ணிடம் பழகி வந்துள்ளனர். இந்த தகவல் இருவருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பெண் கூறியதால், வாலிபர் ஒருவர் மற்றொருவரை கொலை செய்து விடுவதாக கூறி பட்டாக்கத்தியுடன் போதையில் தாக்கி கொள்ள முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் வெகு துரிதமாகவும், சமயோஜிதமாகவும் செயல்பட்டு பட்டாக்கத்தியை பறித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்மந்தத்திற்கு பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினர் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தன. அவரது கடமைப்பற்று, தன்னல மற்ற சேவை மனப்பான்மை மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உறுதியான செயல்பாடு மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்மந்தத்தின் இந்த சிறப்பான பணியை பாராட்டும் விதமாக, மாவட்ட எஸ்பி ஏ.சுந்தரவதனம் பாராட்டுகள் தெரிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

வாசுதேவநல்லூர் சிந்தாமணி நாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக சரவணன் தேர்வு
இறந்தவருக்கும் 2026-ல் வாக்களிக்கும் அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்
சலங்கை நாதம் கலை விழாதமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்
திருவரம்பூர் திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பரப்புரை
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி; பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதிருப்பத்தூர்மாவட்டம்

திருப்பத்தூர் மாவட்ட மக்கள் குறை தீர்வு கூட்டம்

May 14, 2025
32 Views
மகளிர் அணியை வலு சேர்க்க
பாரதிய ஜனதா கட்சி என்பது கீழ் இழுக்கும் சக்தி
தேனி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி அம்மன் கோயில் சித்திரை முழுநிலவு திருவிழா கோலாகலம்
தமிழ்நாட்டில் பன்னாட்டு தொழில் முதலீட்டால் இந்தியன் வங்கியின் சேவை உயர்வு பெற்றுள்ளது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account