திருச்சி, ஏப். 28 –
கணவரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய லஞ்சம் கேட்ட புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர் காவல் ஆய்வாளர் கலா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த தம்பதியினர், ஐஜி அலுவலகம் அருகே குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



