கிருஷ்ணகிரி -ஜூன்-11 கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஊராட்சி ஒன்றியம், பாலேப்பள்ளி கிராமத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் NADCP கீழ் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை 5 வது சுற்று மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயினை கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் NADCP FMD 5th சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி 5 வது சுற்று வைக்கப்பட்டுள்ளது. 1 மாத காலம் நடைபெறும் இத்தடுப்பூசி முகாம்களில் மாவட்ட முழுவதும் சுமார் 3,27,850 டோஸ்கள் போடப்பட உள்ளது. மேலும், முகாம் நடைபெறும் கிராமங்களில் கால்நடை வளர்ப்போரிடம் முகாம் நடப்பது தொடர்பாகவும், தடுப்பூசி போடுவதால் உண்டாகும் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இம்முகாம்களுக்கு வரும் கால்நடை உரிமையாளர்கள் தங்களின் ஆதார் எண் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை தடுப்பூசி குழுவினரிடம் வழங்கி கால்நடைகளுக்கு தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம். இன்று இக்கிராமத்தில் 255 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. எனவே கால்நடை வளர்ப்போர் தங்களின் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை போட்டுக்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.
இம்முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் .சி.இளங்கோவன், ஆவின் பொது மேலாளர் .சுந்தரவடிவேலு, உதவி பொது மேலாளர் .நாகராஜ்,கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் .அ.அருள்ராஜ், .ஜே.மகேந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் மரு.சரவணகுமார், மரு.திருமுருகன், மரு.புவனேஸ்வரி, மரு.சிவசங்கரி, மரு.தினேஷ், ஊராட்சி மன்ற தலைவர் .ஜெசிந்தா வில்லியம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் .வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் கலந்துக்கொண்டனர்.