கன்னியாகுமரி, ஏப். 10 –
ஏப்ரல் 10 ம் தேதி முதல் 12ம் தேதி வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் நடக்கும் 20 வயதுக்கு உட்பட்ட தேசிய அளவிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கு, தமிழ்நாடு அணி சார்பில் மேலப் பெருவிளையை சேர்ந்த மாணவன் ஜெனிஷ் தேர்வாகி உள்ளார்.
அவருக்கு மூவேந்தர் மல்யுத்த பயிற்சி பள்ளி சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
குமரியில் மல்யுத்த வீரர்களை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருக்கும் தென்னிந்திய மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்க பொதுச்செயலாளர் மாஸ்டர் லோகநாதனுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.



