தேனி, ஏப்ரல் 9 –
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் தேனி மாவட்டத்தில் இன்று விழிப்புணர்வு நடைபயணப் பேரணி நடைபெற்றது. தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை, மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு, வாக்குப்பதிவின் அவசியத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் பேரணியில் நேரடியாக கலந்து கொண்டு, மக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை உணர்ந்து 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.



