ஈரோடு, ஏப். 9 –
கே எம் சி எச் மருத்துவமனை தலைவர் நல்ல ஜி. பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: டாக்டர் மோகன் கடந்த 15 வருடங்களாக இருதய நலம் ஆலோசனை மற்றும் இருதய நுண்துளை சிகிச்சை நிபுணராக கே.எம்.சி.ஹச் கோவை மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். தற்போது ஈரோடு கே.எம்.சி.ஹச் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் தனது சேவையை தொடர்கிறார்.
இருதய நல சிறப்பு சிகிச்சைகளான அதிக சிக்கலான ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முறை, இருதய இரத்தக்குழாய் சுண்ணாம்புச் சத்து படிமானத்திற்கான சிறப்பு சிகிச்சைகள், இருதய இரத்தக்குழாய் உள் படம் பிடிக்கும் சிறப்புச் சோதனை மற்றும் ஸ்டண்ட் சிகிச்சை, இருதய செயலிழப்பிற்கான சிறப்பு சிகிச்சை, இருதய தற்காலிக மற்றும் நிரந்தர இருதய துடிப்புக் கருவி பொருத்துதல், இருதய வால்வுகளுக்கான நவீன நுண்துளை சிகிச்சை முறைகள், இருதய இரத்த அழுத்தக்குறைபாட்டிற்கான சிறப்பு பலூன் சிகிச்சை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் மாரடைப்பிற்கான சிறப்பு முதல்நிலை சிகிச்சைகளை வெற்றிகரமாக கையாண்டு வருகிறார்.
இதுவரை ஆஞ்சியோகிராம் 5000, ஆஞ்சியோபிளாஸ்ட்டி 1000, இரத்தக்குழாய் சுண்ணாம்புச் சத்து படிமானத்திற்கான சிறப்பு சிகிச்சைகள் 250 ஆகியவற்றை திறம்பட மேற்கொண்டு பல மனித உயிர்களை காப்பாற்றியுள்ளார். மேலும் ஈரோட்டில் இருதயத்தில் ஏற்படும் அனைத்து நோய்களையும் கண்டறிந்து அதற்கு தேவையான உடனடி சிகிச்சை முறைகளை மேற்கொண்டு உயிர்களை காப்பாற்றுவதில் கே.எம்.சி.ஹச் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை முன்னோடியாக திகழ்கிறது. இதுவரை 21,000 ஆஞ்சியோகிராம்களும் 11,000 ஆஞ்சியோபிளாஸ்ட்டி, 1,200 பேஸ்மேக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 3,000 த்திற்கும் அதிகமான இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிகிச்சை முறைகளை கையாள மிகச்சிறந்த மருத்துவர்கள் மருத்துவக்குழுவும் அதற்கு தேவையான அதிநவீன மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகளும் கொண்டு ஒருங்கிணைந்த மருத்துவமனையாக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஈரோடு கேஎம்சிஹெச் மருத்துவமனையின் இருதய நோய் நிபுணரான டாக்டர் மோகன், இருதயவியல் நோய் நிபுணர்களான டாக்டர் அனிதா, டாக்டர் சரஸ்வதி, டாக்டர் காயத்ரி பெரியசாமி ஆகியோரை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி அறிமுகப்படுத்தி வைத்தார்.



