தருமபுரி, மார்ச் 25 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன் வேட்பாளராக தலைமை கழகம் அறிவித்துள்ளது. கே.பி. அன்பழகன் 30-4-1958 அன்று பிறந்தார். கல்வித் தகுதி பி.யு.சி, எம்.பி.சி. வன்னியர் இனத்தை சார்ந்தவர். இவரது தந்தையின் பெயர் கே.டி. பச்சையப்பன், 1 / 136 – A கெரகோட அள்ளி கிராமம், காரிமங்கலம் வட்டம், தருமபுரி மாவட்டம் என்ற முகவரியில் வசித்து வருகிறார். இவர் தற்பொழுது அதிமுக தலைமை கழகத்தில் கழக அமைப்பு செயலாளர், தருமபுரி மாவட்ட கழக செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து வருகிறார். இவர் அதிமுகவில் 1978ம் ஆண்டு இணைந்து கழகப் பணியாற்றி வருகிறார். இவர் 1996 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் 2001, 2006, 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் பதவி வகித்து வருகிறார். 2003-2006 ஆகிய ஆண்டுகளில் செய்தி விளம்பரம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். 2016-2021 ஆகிய ஆண்டுகளில் உயர் கல்வித் துறை மற்றும் வேளாண்மை துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். இவர் தற்போது பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி செயலாளர் ஆகிய பொறுப்புகள் வகித்து வருகிறார். தலைமை கழகத்தில் ஏற்கனவே மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர், காரிமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து வந்தார்.



