கிருஷ்ணகிரி, ஜூலை 18 –
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் கையெழுத்தியக்கம் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊழலுக்கு எதிரான
லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் கையெழுத்து இயக்கம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக அருகில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.ரகு, தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு பெருந்தலைவர் காமராஜரின் கனவினை நிறைவேற்றும் விதமாக லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு ஊழலுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பி, நோ்மையான அரசு நிர்வாகத்திற்கும் பொது மக்களின் ஒத்துளைப்பினை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ளது. மேலும் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் தலைமையிலான தமிழக அரசு அனைத்து நிலைகளிலும் லஞ்சம், ஊழலை அகற்ற உறுதி பூண்டு செயல்படுவதை தமிழக காங்கிரஸ் பாராட்டுவதாக தெரிவித்தார்.
மேலும் இந்தப்பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாக செயல்பட்டு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூரின் கரத்தினை வலுப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது கிழக்கு மாவட்ட துணை தலைவர் பி.சி.சேகர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜகுமாரவேல், நாராயண மூர்த்தி, நகரத் தலைவர் லலித்ஆண்டனி, சேலம் ரயில்வே கோட்ட உறுப்பினர் ரஹ்மத்துல்லா, நகர்மன்ற உறுப்பினர் விநாயகம், எஸ்.சி., துறை ஆறுமுக சுப்பிரமணி, விவசாய சங்க மாவட்ட தலைவர் ராமசந்திரன், வட்டாரத் தலைவர் சித்திக் முன்னாள் நகர தலைவர் ரமேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சி சேர்ந்த மாரியப்பன், அப்சல், சக்திவேல், சரவணன், பாண்டுரங்கன், குட்டி என்கின்ற விஜயராஜ், செல்வம், வாஜித், சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஊழலுக்கு எதிராக கையெழுத்திட்டு தங்களது கையை பதிவு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



