திருச்சி, மார்ச் 18 –
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே இரண்டு தினங்களுக்கு முன்பு கார் ஒன்று இறைச்சி கடைக்குள் புகுந்த விபத்தில் சின்னப்பள்ளி பாளையம் அதிமுக கிளை செயலாளர் சுபாஷ் உயிரிழந்தார்.
இதை அடுத்து அவரது இல்லத்திற்குச் சென்ற முன்னாள் அமைச்சர் சிவபதி, சுபாஷின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார். மேலும், 12 ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மறைந்த சுபாஷின் மகளுக்கு ஆறுதலையும் தைரியத்தையும் அவர் கூறினார்.



