தஞ்சாவூர், மார்ச் 5 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 536 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறையின் மூலம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் திருவையாறு (பகுதி) தஞ்சாவூர் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட குடியிருப்புகளுக்கு கூட்டு குடிநீர் திட்ட பணி தொடக்க விழா நடைபெற்றது.
இதனை சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், துரை சந்திரசேகரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியினை தொடங்கி வைத்தனர்.
இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு (பகுதி) தஞ்சாவூர் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 214 குடியிருப்புகள் மற்றும் சாஸ்திர பல்கலைக் கழகத்திற்கான கூட்டு குடிநீர் திட்டமும், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், அம்மாபேட்டை ஒன்றியம் தேவராயன்பேட்டையில் 252 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ரூபாய் 288.02 கோடி மதிப்பிட்டில் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் உள்ள 154 குடியிருப்புகள் மட்டும் திருவையாறு (பகுதி) ஒன்றியத்தில் உள்ள 14 குடியிருப்புகள் மற்றும் தஞ்சாவூர் (பகுதி) ஒன்றியத்தில் உள்ள 46 குடியிருப்புகள் ஆக மொத்தம் 214 குடியிருப்புகள் மூலம் நபர் ஒன்றுக்கு 55 லிட்டர் வீதம் கணக்கிடப்பட்டு ரூபாய் 248.67 கோடி ஜல் ஜீவன் மற்றும் மாநில அரசு நிதி ஆகியவற்றை கொண்டு இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூபாய் 536 கோடியே 69 லட்சம் மதிப்பில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் ஜெயக்குமார், மேற்பார்வை பொறியாளர் ஜெயக்குமார், நிர்வாக பொறியாளர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



