நாகர்கோவில், மார்ச் 4 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் குருசடி ஹோலிகிறாஸ் கல்லூரியில் 2026 மகளிர் தினத்தை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்காக சிறப்பாக செயல்பட்ட சிறந்த பெண்மணிக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விருதானது சமுதாயத்தில் கொடுக்கப்பட்ட கடமைகளையும், பொறுப்புகளையும் உணர்ந்து தமது சமூகப் பணிகளை ஏழை, எளிய மக்களுக்காக செய்து வரும் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா அவர்களுக்கு “ஹோலிகிராஸ் கல்லூரி பெண்கள்” விருதினை மதுரை மாகாண தலைமை அருட் சகோதரி. ஜாக்குலின் பிரகாசம் வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் அருட் சகோதரி. சகாய செல்வி, கல்லூரி செயலர் அருட்சகோதரி. கில்டா உடனிருந்து கௌரவித்தார்கள்.



