புதுக்கடை, பிப். 27 –
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கண்ணையம்பழஞ்சி என்ற பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (32). இவர் மார்த்தாண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தினக்கூலி அடிப்படையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் முஞ்சிறை அருகே உள்ள கிறிஸ்தவ ஆலயம் பக்கம் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (62) என்பவர் ஓட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
இதில் பிரேம்குமார் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஷாஜி மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


