மார்த்தாண்டம், பிப். 27 –
மார்த்தாண்டத்தை தலைமையிடமாக கொண்டு சாலோம் எலும்பு முறிவு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் சார்பில் கிளை மருத்துவமனை அருமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை சார்பில் அருமனை போலீஸ் நிலையத்திற்கு 5 விபத்து தடுப்பு வேலிகள் நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராஜ் பபிதா பெரின் விபத்து தடுப்பு வேலிகளை அருமனை சப் இன்ஸ்பெக்டர் சுஜின் என்பவரிடம் ஒப்படைத்தார். மற்றும் மருத்துவமனை மேலாளர் ஜெயக்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சுனில் குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்



