நாகர்கோவில், பிப். 23 –
கன்னியாகுமரி மாவட்ட விவசாய சங்கங்கள் மற்றும் மீனவர் சங்கங்கள் இணைந்து தமிழக முதல்வர் குமரி மாவட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் 25 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு போராட்டம் என அறிவித்து இருந்தனர்.
இது தொடர்பாக பாசனத்துறை சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ, மற்றும் மீனவர் சங்கங்களின் சார்பாக சஹஹார் பாரதி அமைப்பின் தலைவர் சகாயம் ஆகியோரை நாகர்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு 21-ம் தேதி மாலை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று திங்கள்கிழமை 23ஆம் தேதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி தகவல் தெரிவிப்பதாகவும் இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


