பூதப்பாண்டி, பிப். 05 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்சகுளம் மெயின்ரோட்டில் நேற்றிரவு சுமார் 8.00 மணியளவில் பைக்கில் சென்ற இரு வாலிபர்கள் அடையாளம் தெரியாத ஏதோ ஒரு வாகனம் மோதி சாலையில் கிடந்துள்ளனர்கள் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் உடனே காயம்பட்டவர்களை மீட்டு சென்று பார்க்கும் போது இரு வாலிபர்களும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து கிடப்பது தெரியவந்தது.
இந்த விபத்து குறித்து விசாரிக்கும் போது இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை எனவும் அதில் இறந்த வாலிபர்களில் ஒருவர் இறச்சகுளம் ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த வெல்டர் சுபின் (30) என்றும் இன்னொருவர் கலுங்கடி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிகிறது. மேலும் இந்த விபத்து குறித்து பூதப்பாண்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.



