புதுக்கடை, ஜன. 29 –
புதுக்கடை அருகே உள்ள மணியாரம்குன்று பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (54). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கடந்த சில மாதங்களாக அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
சம்பவ தினம் ஜெயக்குமார் வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வீட்டிற்கு வந்தவர் படுக்கை அறைக்கு சென்றார். அதன் பிறகு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, அங்கு ஜெயக்குமார் தூக்கில் பிணமாக தொங்கும் நிலையில் காணப்பட்டார். உடனடியாக அவரது மனைவி லதா (47) என்பவர் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடம் சென்று ஜெயக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


