By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரசாந்த் மருத்துவமனையில் 76 வயது மூதாட்டிக்கு பெருநாடி வீக்கத்திற்கு அறுவை சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பிரசாந்த் மருத்துவமனையில் 76 வயது மூதாட்டிக்கு பெருநாடி வீக்கத்திற்கு அறுவை சிகிச்சை
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

பிரசாந்த் மருத்துவமனையில் 76 வயது மூதாட்டிக்கு பெருநாடி வீக்கத்திற்கு அறுவை சிகிச்சை

Last updated: January 6, 2026 5:55 pm
January 6, 2026
37 Views
Share
SHARE

சென்னை, ஜன. 06 –

சென்னை வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு, 76 வயது பெண்மணி ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ‘ஏறுமுக பெருநாடி வீக்க’ (Ascending Aortic Aneurysm) பாதிப்பிற்கு மிகச் சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து குணமளித்திருக்கிறது.

இந்நோயாளிக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், இதயத்திலிருந்து உடலுக்கு இரத்தம் கொண்டு செல்லும் முக்கியக் குழாயான பெருநாடி மற்றும் அதன் வளைவுப் பகுதி (Proximal arch) ஆகியவை மிகவும் விரிவடைந்திருப்பது கண்டறியப்பட்டது. பெருநாடியின் பலவீனமான பகுதி இவ்வாறு விரிவடைவதே ‘அஸெண்டிங் அயோர்டிக் அனீரிசம்’ என மருத்துவ துறையில் அழைக்கப்படுகிறது.

ஏறக்குறைய 10 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில், பாதிக்கப்பட்ட பெருநாடிப் பகுதி மற்றும் வளைவுப் பகுதி அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக 30 மிமீ ‘இன்டர்கார்ட் கிராஃப்ட்’ (Intergard graft) எனும் செயற்கைக் குழாய் பொருத்தப்பட்டது. நோயாளியின் இரத்த நாளங்களில் சுண்ணாம்புச் சத்து அதிகம் படிந்திருந்ததாலும், திசுக்கள் வலுவிழந்திருந்ததாலும், இரத்தப்போக்கு மற்றும் நரம்பியல் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்தது.

நோயாளிக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, அறுவை சிகிச்சையின் போது மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் கண்காணிக்க என்.ஆர் எஸ் (‘NIRS’ ) எனும் நவீன தொழில்நுட்பத்தை மருத்துவர்கள் பயன்படுத்தினர். வெற்றிகரமான இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி எவ்வித சிக்கலுமின்றி குணமடைந்ததால், ஐந்தாவது நாளில் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்துப் பேசிய பிரசாந்த் மருத்துவமனையின் இருதயம் மற்றும் மார்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கௌஷிக் கண்ணன் கூறியதாவது: “பெருநாடி வீக்கம் என்பது சுமார் 10,000 பேரில் 6 முதல் 8 பேரை பாதிக்கக்கூடியது. இப்பாதிப்பின் அறிகுறிகள் தெளிவாக குறிப்பிட்டுச் சொல்லும்படி இருக்காது என்பதால், சாதாரண நெஞ்சு வலி என்று கருதி பலர் அலட்சியமாக இருந்து விடுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் உள்ள முதியவர்களுக்கு பெருநாடி வீக்க பாதிப்பு காலதாமதமாக கண்டறியப்படுமானால், உயிருக்கே ஆபத்தானதாக அது மாறக்கூடும்.

முன்கூட்டியே கண்டறிதலும், துல்லியமாகத் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சையும் மட்டுமே பெருநாடி வீக்க வெடிப்பு அல்லது பக்கவாதம் போன்ற தீவிர அபாயத்தை தடுக்க உதவும். பல்வேறு துறைகளின் நிபுணர்களின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும், திறன்மிக்க செயலாக்கமும் இந்த அறுவை சிகிச்சை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெறுவதற்கு உதவியது.” என்றார்.

விளம்பரம்

You Might Also Like

கள்ளக்காதல் விவகாரம்; மதுபானத்தில் விஷம் ஊற்றி கள்ளக்காதலன் கொலை; 3 பேருக்கு ஆயுள் தண்டனை
மணப்பாறை பேருந்தின் ஸ்டெப்னி டயர் வெடித்து விபத்து
புதுக்கடை அருகே கடனாக கொடுத்த பணம் நகைகளை திருப்பி கேட்டவர்கள் மீது தாக்கு: 3 பேர் மீது வழக்கு
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்
2, 708 உதவி பேராசிரியர்கள் நேரடி நியமனம்; பணி அனுபவ சான்று பதிவேற்றம் செய்தல்; ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் பொதுக்குழுக் கூட்டம்

July 11, 2024
74 Views
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் சர்வதேச மனித உரிமைகள் தின விழா; தொடர் சங்கிலி உறுதிமொழி ஏற்பு
கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account