சென்னை, ஜன. 03 –
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பல்கலைக்கழகமானது பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் துறை, சமையற்கலை மற்றும் கலை, அறிவியல் முதலிய உயர் கல்வித் துறைகளில், பல்கலை கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா சென்னை வேலப்பன் சாவடி ஏ.சி.எஸ் மருத்துவமனை கன்வென்சன் அரங்கில் நடைபெற்றது. இதில் தேர்வில் வெற்றி பெற்ற 5087 இளங்கலை, முதுகலை, மருத்துவம் மற்றும் பி.எச்டி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கி மாணவர்களிடையே தன் உரையை நிகழ்த்தினார்.
மேலும் இப்பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை மா.சுப்பிரமணியன் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நைனார் நாகேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.



