தருமபுரி, ஜூலை 29 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் அறிவுறுத்துதலின்படி, இந்தியன் வங்கி பிரதான கிளையில் செயல்பட்டுவரும் ஆதார் சேவை மையத்தில் மாவட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தனி வட்டாட்சியரால் 24.07.2026 அன்று ஆய்வு மேற்கொண்டதில் இலவசமாக புதிய ஆதார் பதிவு செய்வதற்கு பதிலாக ரூ.150 பெறுவதும், ஆதாரில் மாற்றம் /திருத்தம் செய்ய ரூ.75 க்கு பதிலாக ரூ.100 கூடுதாலகவும், கைரேகை, கருவிழி பதிவு செய்ய ரூ.125 க்கு பதிலாக ரூ.250 கூடுதலாக பெறுவதும் கண்டறியப்பட்டது.
இது UIDAI நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் பெற்றதால் அந்த ஆதார் சேவை மைய தரவு உள்ளிட்டாளரின் ஆதார் ஐ.டி 24.07.2026 அன்று முடக்கம் செய்யப்பட்டு, இந்தியன் வங்கி பிரதான கிளை ஆதார் சேவை மையம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.



