மயிலாடுதுறை, செப். 9 –
மயிலாடுதுறையை அடுத்துள்ள குத்தாலம் பேரூராட்சியில் இரண்டாவது கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்றது. முகாமை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து முகாமில் கலைஞர் காப்பீடு திட்டம், மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவி தொகை, ஆதார் கார்டு பெயர் மாற்றம், வேளான்மை இடு பொருள் பெறுதல் போன்ற திட்டங்களை மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் இம்முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 1500க்கு மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இம்முகாமில் பேரூராட்சி செயல் அலுவலர் சிவலிங்கம், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகளும் இம்முகாமில் கலந்து கொண்டனர்.



