தென்காசி, டிசம்பர் 31 –
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பெயர் மாற்றம் மற்றும் நிதி ஒதுக்கீட்டை குறைத்திட்ட மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் மாவட்ட துணைத் தலைவர் தோழர் சு.கோபி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட / வட்ட நிர்வாகிகள் தோழர் தமிழ் பாண்டியன், தோழர் பூத்துரை, தோழர் மிராஸ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் தோழர் அ. அன்பரசு வரவேற்புரை ஆற்றினார். உண்ணாவிரத போராட்டத்தை மாநில செயலாளர் தோழர் அ. பாலாஜி துவக்கி வைத்து துவக்கவுரை ஆற்றினார். மாவட்ட பிரச்சார அணி செயலாளர் தோழர் சிதம்பர சக்தி கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.
போராட்டத்தை வாழ்த்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் தோழர் பேராசிரியை சங்கரி, தமிழ்நாடு வருவாய் துறை சங்க மாவட்ட தலைவர் தோழர் இசக்கி துரை, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மேனாள் மாவட்ட தலைவர் தோழர் P.K.மாடசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் வே. வெங்கடேஷ், ஜாக்டோ – ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் பிச்சைக் கனி, தோழர் சண்முகசுந்தரம், தோழர் சதிஷ், தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் தோழர் வே.புதியவன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஓய்வு பெற்றோர் சங்க மாநில துணைத் தலைவர்கள் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார், தோழர் மோகன் ,தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஓய்வு பெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் துரை டேனியல் ,பணி மேற்பார்வையாளர் தோழர் பாலுச்சாமி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாவட்ட செயலாளர் தோழர் பீ.ராஜசேகர் சிறப்புரையாற்றினார் .
நிறைவாக தமிழ்நாடு சமுக நலத்துறை பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் தோழர் க.துரைசிங் நிறைவுரையாற்றினார். தென்காசி வட்ட செயலாளர் தோழர் கு.பாலகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார் . உண்ணாவிரத போராட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



